ஈச்சை மரத்து வேர்களே.. கப்பல் ஏற முதல்.. எங்கள் கதை கேளுங்கள்..!!

kathankudi8.jpg

{சோழன் ஆண்ட தமிழன் வாழ்ந்த பூமியில் கப்பலேறி குடியேற வரும் அரபுத் திமிர்கள்.. பேரீச்சை மரங்கள். ஈழத்தின் கிழக்கின் காத்தான்குடி என்ற ஊர் இன்று முழு முஸ்லீம் கிராமமாகி அரபு வடிவம் எடுக்கிறது}

 

அரபிய

மணற்படுக்கையின்

அற்புதங்களே

ஈச்சை மரத்து வேர்களே..

கூலிகளாய்

நாம் அங்கு

சிந்திய வியர்வை

சிதறிய நீரில்

வளர்ந்து பெருத்த திமிர்களே..!

 

எட்ட வளர்ந்து

கனி தரும் போது

ஒட்டகமாய்

தாங்கி நின்று

பறித்துப் பெட்டியில் அடைத்து

ஏற்றி விட்டு

நாம் கூனி விட்டோம்..!

எஜமானர்களின்

எண்ணெய் காசில்

நீரோ

நிமிர்ந்து நின்று

மினுமினுக்கிறீர்..!

 

விமானம் ஏறி

ஆசை கொண்டு

அரபுலோகம் வர

தங்கை மீது

பழிமுடித்து

அவள் தலை கொய்தீர்..!

நீரோ..

வேரூன்ற

கப்பலேறி

தமிழீழம் வருகிறீர்

காத்தான்குடியில்

குந்திவிட..!

குடியிருந்துவிட..!!

 

சுவட்டு எண்ணெய்கள்

நேற்றைய மரணத்தின்

பெறுதிகள்.

உங்கள் பணத்திமிரின்

மதத்திமிரின்

தேட்டங்கள்..!

 

ஈழ மண்ணில்

என்ன இருக்கு..

விதவைகளான

எம் சகோதரிகள் தான் இருக்கு..!

மிச்சம் என்ன….

உம் சோதரர்கள்

கொன்று புதைத்த

சோதரத் தமிழன்

இரத்த ஈரம் தானுண்டு..!

 

இன்னும்

என்ன

உறிஞ்ச வருகிறீர்

சொந்த நிலம் இழந்து

அநாதைகளாய் நாம் இங்கு..!

மூச்சுத் தான் மிச்சம்

அதைவும்

அல்லாவுக்கு

அடகு கேட்காதீர்..!

 

விட்டு விடுங்கள்

எம்மை..

நிம்மதியாய் வாழ்கிறோம்.

நெடும் பனை நடுவே

நொங்குண்டு..

வாகை நிழலில்

செண்பகத்தின்

சிறகடிப்பில்

உந்தி எழும்

சுதந்திர

தேசக்காற்றிழுத்து.!

 

{ஈழம்: காத்தான்குடி… இன்று.}

Leave a comment »

தீக்குளித்தால் தான் சீதைகள்..!!

முன்னால் நின்றது

மாரீசனின் மானல்ல

மயங்கி நீர்

அண்ணலை விட்டு

ஆரணங்காகி

அணிவகுக்க..

தாயக

விடுதலைக் கனவே

உம்மை அங்கு அணிவகுத்தது..!

 

தந்தை செல்வா சொல்லி

தந்தை பெரியார் வாழ்த்தி

கலைஞர் தலையாட்டி

எம் ஜி ஆர் கரம் நீட்டி

அமிர்தலிங்கம் வெற்றித் திலகமிட

யோகேஸ்வரன் கேட்ட இடத்தில்

அணிவகுத்த

இளைஞர் கூட்டத்தின் வழி

நீவிர் நின்றீர்

அண்ணன் பாதையில்

கொள்கை காத்து..!

 

களங்கள் பல கண்டீர்

இந்திய

வானரப்படைகளென்ன

கொடும்

சிங்கள பேரினப்படைகளும்

கண்டீர்.

போதாதேன்று

இலக்கிய காலமே

கண்டிராத

அமெரிக்கக் கழுகுகளும்

இஸ்ரேல் வல்லூறுகளும்

கூடவே…

சீன ரகன்களும்

பாகிஸ்தானியப் பிறைகளும்

ரஷ்சிய அரிவாள்களும்

உம் முன்

மல்லுக்கட்டக் கண்டீர்.

 

எல்லாம் வென்று

வெற்றித் திருநாள்

வரும்…

வன வாசம் முடித்து

நாடு மீளும் நாள்

வரும்..

மங்கையர் நீர்

குப்பி மிஞ்சி

மங்கள நாண் தரித்தீர்

வேளை வரும்..

தாயக விடியலோடு

வாழ்வும்

வசந்தமும் வருமென்றே..!

 

கூனிகளின் குந்திகளின்

சூழ்ச்சிகள்

தலைவிதிகள் மாற்றிப் போட…

தோள்கொடுத்தோர்

தலையாட்டிகளாய்

மாறி விட

தரித்திரமானது

தேசம்..!!

முள்ளிவாய்க்காலில்

இனவெறி

அரக்கர் தம்

கரங்களில்

கை சேர்ந்தீர்

எம் கண்மணிகளே..!

 

ஹிந்திய சீதைக்கு

ஓர்..

சோலை வனம்

அழகு வனம்

அமைதி வனம்

தந்தவன்

இராவணன்..!

மங்கை மனம்

தானாய் இசையும் வரை

விரல் நுனிதனும்

அவள் மேனி

தொட்டிடா..

கொள்கை கொண்டவன் அவன்..!

இலக்கிய காலத்து

ஆணின் அடையாளம்..!

 

தமிழீழச் செல்வங்களே

எங்கள் தேசத்துச்

சீர்திருத்தச் சீதைகளே

உங்கள் சிறை..

அசோக வனங்கள் அல்ல

அகோர வனங்கள்..!

 

மார் திருகும் கரங்களும்

கற்புத் தின்னும்

சிங்களப் பிசாசுகளும்

பெண் உடல் ரசிக்கும்

சொந்த இனக் கூலிகளும்

கும்மாளமிட்ட

இடம்…

நீங்கள் இருந்த

அசோக வனங்கள்..!

பேரினமும்

வல்லாதிக்கமும்

மாற்றுக்கருத்தும்…

போதையூட்டி வளர்த்த

நவகால நரமாமிச

முண்டங்கள் அவை..!

கலிகாலத்து

ஆண்களின் அடையாளம்..!

 

உதவி கோரும்

உங்கள்..

கூக்குரல் தனும்

கேட்டிடா

செவி இறுக்கி

கூனி நின்று

கூத்தாடி மகிழும்

சொந்த இனம்

இன்னொரு பக்கம்..!!

 

சீதைகளே

நீவிர் இன்று

அகோரவனம் மீண்டு

சமூக வனத்தில்

தடம் பதித்தாலும்..

சோதனைகள் உம்மை

துரத்திட்டாலும்

தற்கொலைகள் உம்மை

தாலாட்டி அழைத்திட்டாலும்..

தீக்குளிக்காமல்

தீண்டமாட்டுது

எம் தமிழ் சமூகம்

இலக்கிய காலத்து

கொள்கை காத்து..!

 

தீக்குளிக்க

காத்து நிற்கும்

உங்கள் நீண்ட

வரிசை கண்டு..

அதில் கொடுமை

காணாது எம் கண்கள்

நவ காலத்தின்

நவீன நாசியமாய்

எம்

தமிழ் மண்ணில்

அவை இன்று..!

ஹிட்லரிலும்

கேடாய்

நம்

மனச்சாட்சி..!

அதுதான் உண்மை..!

 

சுயநலத்தால்

உம்மேல்

பழியிட்டு

குழியிட்டு

புதைத்து விட்டு

தொலைத்து விட்டு

மாவீரர் ஆக்கி

மகிழ்ந்திடுவோம்

நவம்பர் 27 இல்..!

 

விடுதலையும்

வீரமும்

எங்கே..?!

அங்கே…

எம்மை

இதமாய்

தழுவிக் கொள்கிறது

அடிமையும்

அசைலமும்..!

Leave a comment »

ஈழத்தமிழர் வரலாற்றில் வந்துதித்த..நவகால பெண் சத்துருக்கள்…

30984-004-9561B010.jpg

Ulaga_Thamilaradchi_001.jpg

அம்மை சிறீமாவோ

சிங்களத்தின்

தலைமகளாய்

தமிழர் நிலமதில்

தமிழாய்ச்சி திடலதில்

தமிழர் இனப்படுகொலை

ஆரம்பித்தே

பெளத்த பேரினத்தின்

பெருமை சேர்த்த

மூத்தமகள்.

chemmani_soilsample.jpg

mahinda-chandrika.jpg

அன்னைக்கு மேவியவள் தான்

மகள் சந்திரிக்கா…

செம்மணியில் அதை

தமிழர் புதைகுழியில்

நிறுவி வைத்தார்..!

பதவி தந்து

அரக்கன் ராஜபக்சவை

இனத்துவேச உருவேற்றி

முள்ளிவாய்க்கால்

இனப்படுகொலையில்

தமிழர்

இரத்த ருசி காண விட்டார்..!

J-Jayalalitha.jpg

அண்டையில்

அம்மணி “ஜெ”

கொடூரன் ராஜீவின் சாவொடு

சத்துருக் கொண்டு…..

விழுப்புண் பட்டு

அடைக்கலம் தேடி

தாய்நிலம் நாடி

வந்த எம் கண்மணிகளை

சயனைட் கடித்து

வாய் நுரை தள்ள

சாகடித்து…

கொன்று புதைத்தார்..!

எத்தனை எம்

விடுதலைச் சிட்டுக்கள்

அநியாயமாய்

வீதியில் கிடந்தார்

பிணங்களாய்..!

அது போதாதென்று

ஆகாய வழி

குண்டு போட புலி வருகுது

கிலி கிளப்பி

புலித் தடையும்

வலுவாக்கி

கொண்டு வந்தார்

இவர்…

புலி வளர்த்த

எம் ஜி ஆரின் வாரிசு..!

ChelvanayagamNAmirthalingam.gif

அம்மையார் என்று மொழிய

அதில் வெட்டிப்

பெருமை வளர்த்த

அமிர்தலிங்கத்தின் பக்கதுணை

மங்கையற்கரசி

அன்றும் இன்றும்

சிங்கள அடிவருடி

புத்தன் கச்சே

சரணமென்று கிடக்கிறார்

துரோகத்தின் முதலாய்..!

n2b.jpg

அணிவகுத்து

ஐயாயிரம் இளைஞர்கள் தாரும்

தமிழீழம் கையில் தருகிறேன்..!!!

ஆணையிட்டே

ஆள் எஸ்கேப்பான

யோகேஸ்வரனின் உற்றதுணை

அரியாசனத்து ஆசையில்

தமிழர்  தீரத்தைக்

காட்டிக்கொடுத்தே

துரோகி சறோஜினியாய்

பரலோகம்

போய்ச் சேர்ந்தார்..!

susi.jpg

ஈழத்தமிழர்

உள்ளமதில்

அன்னை என்று

நின்ற மகள் இந்திராவின்

மருமகள்..

தமிழினக் கொலைஞனின்

தாலி தரித்தவள்..

இத்தாலி வெள்ளைக்காரி

எடுத்தாளே ஓர் சபதம்

ஆடினாளே ஒரு சதிராட்டம்

சரிந்ததுவே

ஈழத்தமிழர்

ஒட்டுமொத்த

வரலாறும் வாழ்வும்..!

 

அழிவில் இருந்து

மீளத்துடிக்கும்

தமிழர் வாழ்வில்

இன்னும் நீளுது

பெண்

சத்துருக்கள் விளையாட்டு.

சதாப்தங்கள்  பல கடந்தும்

விடுதலையும்

சுக வாழ்வும்

தாமதித்து

வீணடிக்கப்படுகுது..!

 

Leave a comment »

அடம்பிடிக்கும் ஆகாசவாணி..!

Akashvani-FM-925602907-7113022-1.jpg

ஆகாசவாணி…

டெல்லியின் குரலாய்

தமிழ் ஈழ மண்ணில்

ஒளிவு மறைவு வாழ்வில்

சந்துபொந்தில்

நடந்த அந்த

ஓரிரு நிகழ்வுகள் கூட

ஒளிப்பு மறைப்பின்றிச்

சொன்னது ஓர் காலம்..!

 

காலை மதியம் மாலை என்று

முறுக்கிவிட்ட

வானொலிகள்

மத்திய மாநிலச் செய்திகள் காவி வர

களத்தில் நின்ற வீரனும்

நிகழ்வின் விளைவறிவது

அங்கு தான்..!

 

அமைதிப் படை என்று

அரக்கர் படை ஒன்று வந்து சேர

ஆகாசவாணியும்

அண்டப்புளுகிற்கு

அடிபணிந்து கொண்டது.

லங்காபுவத்தோடு

காதலொடு கூடலும் கண்டு கொண்டது..!

 

அன்று தொற்றிய வியாதி

இன்றும் ஆறவில்லை.

இத்தனை ஆயிரம்..

தமிழர் சாவுகள் கண்டும்

இரங்கவில்லை…

அண்டப்புளுகொடுதான்

அதன்

அந்தியக்காலம் என்று

அடம்பிடிக்குது..!

 

இந்தியாவின்

இந்துக்கள் கட்சியாம்

ஈழ மண்ணில்..

தமிழ் பேசும்

இந்துக்கள் அழிவை

சிங்களம் செய்தால்

மன்னிக்குமாம்.. மறக்குமாம்..!

ஹிந்தி பேசும்

இஸ்லாம் செய்தால்

கொலைக் கருவி ஏந்துமாம்…!

சரத்பவாராம்

அன்னை இந்திராவோடு

ஒட்டிய போது

ஈழத்தமிழருக்காய்

ஓர் விரதம்

அன்னை சோனியாவோடு

ஒட்டிய பிறகு

விரதமும் தாபமாச்சு..!

 

ஆகாசவாணிகளே

ஆகாயம் விட்டு வர வேண்டாம்

இடையில்

இனிப்பாய் அமைந்திட்ட

சிங்கள உறவுகள்

அறுக்க வேண்டாம்.

அண்டை அயலில்

நடந்த இன அழிப்புக்கு

ஓர் ஒப்பாரி…

மனிதாபிமானம்

இருந்தால்

காட்டுங்கள்..!

 

கலைஞரும்

கழன்றுவிட்ட பிறகு

கட்சிகள் சாட்டி

கழுத்தறுப்பது

தொடர வேண்டுமா..??!

ஆகாசவாணிக்கு

ஈழத்தமிழன் 

தந்த ஆதரவுக்கு

நன்றிக்கடன் வேண்டாமோ..??!

 

கொடுஞ் சிங்களத்திற்கு

கொடுத்தது போக..

நன்றி

மிச்ச சொச்சம்

எஞ்சி இருந்தால்……

பாரதத்தில் கீதை சொன்னபடி..

ஐநாவில் அதை

அழிந்து போன

தமிழருக்கு.. காட்டி நிற்க..!!!

Comments (1) »