Archive for தமிழகம்

பிக் பாஸ் போயாச்சா ஜனனி அக்கா.

ஜனனி அக்கா

உங்க ஈழத்தம்பி பேசுறன்..

ஊரில சிவனேன்னு

சும்மா கிடந்த ஜனனி அக்கா

ஐ பி சி ஜனனி அக்கா ஆச்சு

இப்ப கடல் கடந்து

பிக் பாஸ் போயாச்சு.

அதுக்கு என்ன ஆச்சு

பேச்சு வேணாம்..

நாம ஈழத் தமிழங்களாச்சே

பாவப்பட்ட ஜென்மமாச்சே..!!

உங்க அக்கா அண்ணா

ஊருக்காய் மடிஞ்சப்போ

இந்த பிக் பாஸெல்லாம்

கிக் பாஸா அடிச்சாங்க..

இப்ப மட்டும் என்னே பாசம்

கூப்பிட்டு வைச்சு – உங்க

தமிழை கலாய்க்கிறாய்ங்க

ஏன்…

உங்களையே கலாய்க்கிறாய்ங்க..

கூடவே..

ஈழத்தை அசிங்கம் பண்ணுறாய்ங்க..

தேவையாக்கா இந்த பிழைப்பு நமக்கு..!!

ஏதோ போயிட்டீங்க

கடைசி வரைக்கும்

காசுக்காக நம்ம தமிழை மாத்திடாதேங்க

புகழுக்கா புழுப்போல் நெழியாதீங்க

உலகுக்கே அடங்காமல்

போராடி வீழ்ந்த இனம்

இறுமாப்பாய் நில்லுங்க

ஈழத்தமிழிச்சியாய்

அது பிக் பாஸ் ஆனான்ன

இமயம் ஆனான்ன…!!!

***—****—***

Leave a comment »

சந்தனமேனிகள் செம்மரக்கட்டைகளாதென்ன..!!

செந்தமிழ் தாயின்

சந்தன மேனியர்

ஆந்திர எல்லையில்

சரிந்தே வீழ்ந்தனர்

மரக்கட்டைகள் நடுவே

செம்மரக்கட்டைகளாய்..!

 

கிரந்த மொழி பேசும்

திராவிட வாரிசுகளாம்

தெலுங்கர்கள்

பட்சாதாபமின்றி

வேட்டையாடி மகிழ்ந்தனர்

செந்தமிழன் பிணம் வீழ்த்தி…!

 

சிங்களப் பேய்கள்..

ஹிந்தியப் பிசாசுகள்

குடித்த ஈழத்தமிழ் இரத்தம்

காய முதல்..

கடலில் கரைந்த

தமிழகத் தமிழனின் குருதி

நிறம் மாற முன்..

நடந்தது சம்பவம்..!

 

சந்தனக் கடத்தலை

சாட்டி

முதலைகள்

வேட்டையாடி முடித்தன..

மீண்டும்

ஓர் இனப்படுகொலையின்

நினைவை

மனதின் ஓரத்தில் இருத்தி..!

 

புலிக்கொடி நடுவே

படை நடத்திய

சோழ தேசம்

இன்று

வீழ்ந்து மடிகிறது..!

காரணம் தான் என்ன..

தமிழனை தமிழன்

ஆள வழியின்றி போனதே..!

 

மீட்போம்

எம் ஆளும் உரிமை..

காப்போம்

தமிழர் வாழ்வுரிமை

இவ் வையகத்தில்..!

 

மாற்று வழி தான்

இதற்கும் இல்லை

புரிந்தே நின்று

புரிய வைப்போம்

சொந்த தேசமிழந்து..

வையகம் எங்கும்

சிதறி வாழும்

தமிழ் உள்ளங்களில்..!!

Leave a comment »

அண்டையில் இருக்கும் அசிங்கமே அநியாயமே..!

முள்ளிவாய்க்கால்1

அண்டையில் இருக்கும்

அசிங்கமே

அநியாயமே

87 இல் ஈழத்தில்

தமிழனைக் காப்பதாய்

படைகள் கொண்டு வந்தாய்

சிங்களத் துவக்கால் அடியும் வாங்கினாய்

இருந்தும் அவன்

வால்பிடித்து கரம் குலுக்கி

அடித்தவனைக் காத்தாய்..

நண்பனெனும் வரமும் கொடுத்தாய்..!

 

வரவேற்று..

பூமாலை போட்ட தமிழனை

“பூமாலை” என்ற பெயரில்

படைகள் ஏவிக் 

கொன்றாய் குவித்தாய்..!

சொந்த இனத்தைச் சூறையாட

கூலிகளை வளர்த்தாய்

இறுதில்

சுருட்டியதோடு

கூட்டிக் கொண்டு ஓடினாய்..!

 

நீண்ட தொல்லை இது

துரத்தாமல் தீராது என்றே..

வீரப் புலிகள் விரட்டி அடிக்க

ஓடிய நீ…

மீண்டும்…

கொல்லைப்புறந்தில்

இருந்து கொண்டு

முள்ளிவாய்க்காலில்

சிங்களத் துணையோடு

வேட்டைகள் ஆடினாய்..!

 

தமிழர் சாவினில்

அரசியல் செய்தாய்

காந்தியம் பேசினாய்

ஜனநாயகம் பசப்பினாய்

சீனனுக்கு அஞ்சிய நீ

தமிழரிடம் வீரம் காட்டினாய்

பிராந்திய

வல்லாதிக்கம் வளர்த்தாய்..!!

 

நீதிகள் மறைத்தாய்

செய்திகள் தவிர்த்தாய்

உண்மைகள் கொன்றாய்

தமிழக

தொப்புள் கொடி உறவுகள்

வாய்கள் அடைத்தாய்

கண்கள் கட்டினாய்

கால்கள் மறித்தாய்

சிறையில் அடைத்தாய்..!

 

சினிமாச் சித்திரங்களை

சிகரத்தில் இருத்தியற்காய்

அவர்களும் அங்கலாய்த்தனர்

தீர்வுகள்  தேடி  ஓடினர்

கெஞ்சினர் கூத்தாடினர்

சொந்த மண்ணில் அடிமைகளாய்..!

 

ஈழத்தமிழன் தான்

சோரம் போய்

இருப்பை இழந்தான் என்றால்

அரைகுறையாய் ஆள வழி இருந்தும்

ஆட்சியை இழந்து

தமிழகத் தமிழன் அவதியானான்..!

 

இன்றும் அதை

ஹிந்திய ஒருமைப்பாடு என்ற

அசிங்கத்தால்

வேலி தகர்த்து

மானுட உணர்வுகள் கொய்து

சோழன் செழித்த தஞ்சையில்

முள்ளிவாய்க்கால்

முற்றத்தில் காட்டி நின்றாய்..!

 

மீண்டும்

கொன்றாய்.. சிதைத்தாய்..

சுயநலப் பேய்களை ஏவி

தமிழர்களை

சிலையாயும் வாழவிடன் என்கிறாய்..!!

அண்டையில் இருக்கும்

அசிங்கமே

அநியாயமே..

உனக்கு மனச்சாட்சியே இல்லையா..??!

 

வலிந்தவன் எல்லாம்

வா வா என்று வட முனையில்

போருக்கு அழைக்க

பயந்து ஓடி

தென்முனையில்

அடைக்கலம் தேடும் கோழையே

தமிழனிடம் மட்டும் தானா

உன் உளவும்

வீரமும்..!

 

ஹிந்திய தேசமே

தெரிந்து கொள்..

சோழப் பெரும்படை

மீண்டும் கிளம்பும்

தெற்கும் வலிமை பெறும்

அங்கும் நீ

கிலியெடுத்து ஓடும் நாள் வரும்..!

அதுவரை எனி

பொறுமையின் உச்சம் எய்திட்ட

தமிழினம் தூங்காது..!

Leave a comment »

அடம்பிடிக்கும் ஆகாசவாணி..!

Akashvani-FM-925602907-7113022-1.jpg

ஆகாசவாணி…

டெல்லியின் குரலாய்

தமிழ் ஈழ மண்ணில்

ஒளிவு மறைவு வாழ்வில்

சந்துபொந்தில்

நடந்த அந்த

ஓரிரு நிகழ்வுகள் கூட

ஒளிப்பு மறைப்பின்றிச்

சொன்னது ஓர் காலம்..!

 

காலை மதியம் மாலை என்று

முறுக்கிவிட்ட

வானொலிகள்

மத்திய மாநிலச் செய்திகள் காவி வர

களத்தில் நின்ற வீரனும்

நிகழ்வின் விளைவறிவது

அங்கு தான்..!

 

அமைதிப் படை என்று

அரக்கர் படை ஒன்று வந்து சேர

ஆகாசவாணியும்

அண்டப்புளுகிற்கு

அடிபணிந்து கொண்டது.

லங்காபுவத்தோடு

காதலொடு கூடலும் கண்டு கொண்டது..!

 

அன்று தொற்றிய வியாதி

இன்றும் ஆறவில்லை.

இத்தனை ஆயிரம்..

தமிழர் சாவுகள் கண்டும்

இரங்கவில்லை…

அண்டப்புளுகொடுதான்

அதன்

அந்தியக்காலம் என்று

அடம்பிடிக்குது..!

 

இந்தியாவின்

இந்துக்கள் கட்சியாம்

ஈழ மண்ணில்..

தமிழ் பேசும்

இந்துக்கள் அழிவை

சிங்களம் செய்தால்

மன்னிக்குமாம்.. மறக்குமாம்..!

ஹிந்தி பேசும்

இஸ்லாம் செய்தால்

கொலைக் கருவி ஏந்துமாம்…!

சரத்பவாராம்

அன்னை இந்திராவோடு

ஒட்டிய போது

ஈழத்தமிழருக்காய்

ஓர் விரதம்

அன்னை சோனியாவோடு

ஒட்டிய பிறகு

விரதமும் தாபமாச்சு..!

 

ஆகாசவாணிகளே

ஆகாயம் விட்டு வர வேண்டாம்

இடையில்

இனிப்பாய் அமைந்திட்ட

சிங்கள உறவுகள்

அறுக்க வேண்டாம்.

அண்டை அயலில்

நடந்த இன அழிப்புக்கு

ஓர் ஒப்பாரி…

மனிதாபிமானம்

இருந்தால்

காட்டுங்கள்..!

 

கலைஞரும்

கழன்றுவிட்ட பிறகு

கட்சிகள் சாட்டி

கழுத்தறுப்பது

தொடர வேண்டுமா..??!

ஆகாசவாணிக்கு

ஈழத்தமிழன் 

தந்த ஆதரவுக்கு

நன்றிக்கடன் வேண்டாமோ..??!

 

கொடுஞ் சிங்களத்திற்கு

கொடுத்தது போக..

நன்றி

மிச்ச சொச்சம்

எஞ்சி இருந்தால்……

பாரதத்தில் கீதை சொன்னபடி..

ஐநாவில் அதை

அழிந்து போன

தமிழருக்கு.. காட்டி நிற்க..!!!

Comments (1) »