அண்டையில் இருக்கும்
அசிங்கமே
அநியாயமே
87 இல் ஈழத்தில்
தமிழனைக் காப்பதாய்
படைகள் கொண்டு வந்தாய்
சிங்களத் துவக்கால் அடியும் வாங்கினாய்
இருந்தும் அவன்
வால்பிடித்து கரம் குலுக்கி
அடித்தவனைக் காத்தாய்..
நண்பனெனும் வரமும் கொடுத்தாய்..!
வரவேற்று..
பூமாலை போட்ட தமிழனை
“பூமாலை” என்ற பெயரில்
படைகள் ஏவிக்
கொன்றாய் குவித்தாய்..!
சொந்த இனத்தைச் சூறையாட
கூலிகளை வளர்த்தாய்
இறுதில்
சுருட்டியதோடு
கூட்டிக் கொண்டு ஓடினாய்..!
நீண்ட தொல்லை இது
துரத்தாமல் தீராது என்றே..
வீரப் புலிகள் விரட்டி அடிக்க
ஓடிய நீ…
மீண்டும்…
கொல்லைப்புறந்தில்
இருந்து கொண்டு
முள்ளிவாய்க்காலில்
சிங்களத் துணையோடு
வேட்டைகள் ஆடினாய்..!
தமிழர் சாவினில்
அரசியல் செய்தாய்
காந்தியம் பேசினாய்
ஜனநாயகம் பசப்பினாய்
சீனனுக்கு அஞ்சிய நீ
தமிழரிடம் வீரம் காட்டினாய்
பிராந்திய
வல்லாதிக்கம் வளர்த்தாய்..!!
நீதிகள் மறைத்தாய்
செய்திகள் தவிர்த்தாய்
உண்மைகள் கொன்றாய்
தமிழக
தொப்புள் கொடி உறவுகள்
வாய்கள் அடைத்தாய்
கண்கள் கட்டினாய்
கால்கள் மறித்தாய்
சிறையில் அடைத்தாய்..!
சினிமாச் சித்திரங்களை
சிகரத்தில் இருத்தியற்காய்
அவர்களும் அங்கலாய்த்தனர்
தீர்வுகள் தேடி ஓடினர்
கெஞ்சினர் கூத்தாடினர்
சொந்த மண்ணில் அடிமைகளாய்..!
ஈழத்தமிழன் தான்
சோரம் போய்
இருப்பை இழந்தான் என்றால்
அரைகுறையாய் ஆள வழி இருந்தும்
ஆட்சியை இழந்து
தமிழகத் தமிழன் அவதியானான்..!
இன்றும் அதை
ஹிந்திய ஒருமைப்பாடு என்ற
அசிங்கத்தால்
வேலி தகர்த்து
மானுட உணர்வுகள் கொய்து
சோழன் செழித்த தஞ்சையில்
முள்ளிவாய்க்கால்
முற்றத்தில் காட்டி நின்றாய்..!
மீண்டும்
கொன்றாய்.. சிதைத்தாய்..
சுயநலப் பேய்களை ஏவி
தமிழர்களை
சிலையாயும் வாழவிடன் என்கிறாய்..!!
அண்டையில் இருக்கும்
அசிங்கமே
அநியாயமே..
உனக்கு மனச்சாட்சியே இல்லையா..??!
வலிந்தவன் எல்லாம்
வா வா என்று வட முனையில்
போருக்கு அழைக்க
பயந்து ஓடி
தென்முனையில்
அடைக்கலம் தேடும் கோழையே
தமிழனிடம் மட்டும் தானா
உன் உளவும்
வீரமும்..!
ஹிந்திய தேசமே
தெரிந்து கொள்..
சோழப் பெரும்படை
மீண்டும் கிளம்பும்
தெற்கும் வலிமை பெறும்
அங்கும் நீ
கிலியெடுத்து ஓடும் நாள் வரும்..!
அதுவரை எனி
பொறுமையின் உச்சம் எய்திட்ட
தமிழினம் தூங்காது..!