நான் கண்டது என்ன
கனவா கனவா..
கன்னி அவள் கண்கள்
எனைத் தீண்டியது என்ன
நனவா நனவா..!
பாதைகள் ஆயிரம் இருக்க
பக்கம் வந்து முட்டிப் போனது என்ன
முட்டுமுட்டு பாடலின்
விளைவா விளைவா..!
பார்வைகள் பரிமாறி
மெளன மொழி பேசியது என்ன
நாட்டியமா நாடகமா..!
கருங் கூந்தல் பரப்பிய
அவள் முதுகு என்ன
சந்தனம் பரப்பிய அம்மிக்
கல்லா கல்லா
என் கண்கள் என்ன
அதில் உருளும் அம்மிக்
குழவியா குழவியா..!
காற்றிலாடும் சுடிதார் என்ன
சாமிக்கு வீசும் சாமரமா
இந்த ஆசாமி
அந்தப் புயலில் சிக்கிச் சிதைந்தது என்ன
விதியா சதியா..!!
முடிவாய் என்ன
கண்களுக்குள் சிக்கி
மூளையில் பதிவானது
அவள் நினைவா நினைவா
அதன் தவிப்பில்
இவன் கமராவை
நோண்டுவது என்ன தலை
விதியா விதியா..!
இதன் பெயர்தான் என்ன
காதலா காதலா
அல்லது என்ன
ஈர்ப்பா ஈர்ப்பா..!
பட்டிமன்றம் நடத்த
இது என்ன
தலைப்பா தலைப்பா..!
விட்டிட்டுப் போடா
அடுத்த பிகர்
இதை விட அழகு என்று
மனம் அலை பாய்வது என்ன
இயற்கை தந்த
வரமா வரமா..!
பிரம்போட அம்மா
கிட்ட வராத வரை
இது தான் என்ன
என் விளையாட்டா விளையாட்டா..!
காலம் பதில் சொல்லும்
“பிளே பாய்” உனக்கு
ஆப்பு வருமடி ஓர் நாள்
காத்திரு காத்திரு…
மனச்சாட்சி மனசுக்குள்
மல்லுக் கட்டுவது தான் என்ன
இயற்கையா இயற்கையா..!
(படம்.. எங்கள் கமரா: கண்ணைக் கவர்ந்து கருத்துள் நுழைந்து கமராவில் சிக்கி கவிதையான பிகர். எங்கிருந்தாலும் வாழ்க..!)