அம்மை சிறீமாவோ
சிங்களத்தின்
தலைமகளாய்
தமிழர் நிலமதில்
தமிழாய்ச்சி திடலதில்
தமிழர் இனப்படுகொலை
ஆரம்பித்தே
பெளத்த பேரினத்தின்
பெருமை சேர்த்த
மூத்தமகள்.
அன்னைக்கு மேவியவள் தான்
மகள் சந்திரிக்கா…
செம்மணியில் அதை
தமிழர் புதைகுழியில்
நிறுவி வைத்தார்..!
பதவி தந்து
அரக்கன் ராஜபக்சவை
இனத்துவேச உருவேற்றி
முள்ளிவாய்க்கால்
இனப்படுகொலையில்
தமிழர்
இரத்த ருசி காண விட்டார்..!
அண்டையில்
அம்மணி “ஜெ”
கொடூரன் ராஜீவின் சாவொடு
சத்துருக் கொண்டு…..
விழுப்புண் பட்டு
அடைக்கலம் தேடி
தாய்நிலம் நாடி
வந்த எம் கண்மணிகளை
சயனைட் கடித்து
வாய் நுரை தள்ள
சாகடித்து…
கொன்று புதைத்தார்..!
எத்தனை எம்
விடுதலைச் சிட்டுக்கள்
அநியாயமாய்
வீதியில் கிடந்தார்
பிணங்களாய்..!
அது போதாதென்று
ஆகாய வழி
குண்டு போட புலி வருகுது
கிலி கிளப்பி
புலித் தடையும்
வலுவாக்கி
கொண்டு வந்தார்
இவர்…
புலி வளர்த்த
எம் ஜி ஆரின் வாரிசு..!
அம்மையார் என்று மொழிய
அதில் வெட்டிப்
பெருமை வளர்த்த
அமிர்தலிங்கத்தின் பக்கதுணை
மங்கையற்கரசி
அன்றும் இன்றும்
சிங்கள அடிவருடி
புத்தன் கச்சே
சரணமென்று கிடக்கிறார்
துரோகத்தின் முதலாய்..!
அணிவகுத்து
ஐயாயிரம் இளைஞர்கள் தாரும்
தமிழீழம் கையில் தருகிறேன்..!!!
ஆணையிட்டே
ஆள் எஸ்கேப்பான
யோகேஸ்வரனின் உற்றதுணை
அரியாசனத்து ஆசையில்
தமிழர் தீரத்தைக்
காட்டிக்கொடுத்தே
துரோகி சறோஜினியாய்
பரலோகம்
போய்ச் சேர்ந்தார்..!
ஈழத்தமிழர்
உள்ளமதில்
அன்னை என்று
நின்ற மகள் இந்திராவின்
மருமகள்..
தமிழினக் கொலைஞனின்
தாலி தரித்தவள்..
இத்தாலி வெள்ளைக்காரி
எடுத்தாளே ஓர் சபதம்
ஆடினாளே ஒரு சதிராட்டம்
சரிந்ததுவே
ஈழத்தமிழர்
ஒட்டுமொத்த
வரலாறும் வாழ்வும்..!
அழிவில் இருந்து
மீளத்துடிக்கும்
தமிழர் வாழ்வில்
இன்னும் நீளுது
பெண்
சத்துருக்கள் விளையாட்டு.
சதாப்தங்கள் பல கடந்தும்
விடுதலையும்
சுக வாழ்வும்
தாமதித்து
வீணடிக்கப்படுகுது..!
பின்னூட்டமொன்றை இடுக