முள்ளிவாய்க்கால் தனில்
அழித்திட்டோம்
புலிக் குகை
கலைத்திட்டம்
தமிழ்க்குடி..
எக்காளமிட்டது
துட்டகைமுனு வம்சம்..!
கலைத்திட்டது
தமிழ் குடியல்ல
தேன்கூடு..
தமிழ் உலகெங்கும் – அது
கட்டுது வதைவதையாய்
பெரும் கூடு..!
தேடி வந்து
அழித்த பகை
திகைத்து நிற்கும்
தருணங்கள் பல
காத்திருக்குது..!
வெற்றி முழக்கமிட்ட
சிங்களம்
விழி பிதுங்க
முழங்குது
விடுதலைக் கோசம்
தமிழ் மாணவர் பாசறையெங்கும்..!
செம்மொழியாம்
தமிழ் மொழியில்
தாய் நிலமாம்
தமிழகத்தில்
மையம் கொண்டு….!
வீழ்த்திவிட்டோம்
சோழப் பெருங்கொடியாம்
புலிக்கொடி..!
மமதையில் நின்ற
மகிந்த கூட்டம் முன்னிலையில்
பறக்குது
மீண்டும் புலிக்கொடி
சர்வதேசம் எங்கும்..!
உச்சரிக்கக் கூட
முடியாது..
பிரிவினையின்றி
ஒட்டிவிட்டோம்
உடைந்த தேசத்தை
ஆயுத ஆக்கிரமிப்பு
கொண்டு அடக்கிவிட்டோம்
தமிழர் உணர்வுகளை
குதூகலித்த சிங்களம்
குறுகி நிற்குது
தமிழீழ முழக்கம்
ஐநா வரை எட்டுவதால்..!
ஆயுதத்தால் பேசி
அடக்குமுறையால் அழித்து
பேரின வெறியை திணித்து
ஹிட்லரென்ன
மகிந்தரென்ன
யுத்த வெறியில்
காண்பது வெற்றியல்ல
சொந்தத் தலைக்கே
வேட்டு..
சொன்னது பழைய வரலாறு
இருந்தும்
கேள் புத்தியற்றோர்
திரும்பப் படித்திட
எழுதுது
தமிழினம் – இன்று
புதிய சரித்திரம்
ஒற்றுமையின் புறப்பாடு கொண்டு..!
நேற்று வரை
தம்பியின் படையிருக்கு
விடிவு வரும்..
நம்பியிருந்த தமிழினம்
முள்ளிவாய்கால் தனில்
சிங்களப் பேரினம்
யுத்த வெறி கொண்டு
தமிழின இரத்தம் சுவைத்து
எழுதிட்ட முடிவுரைக்கு
எழுதுது – இன்று
புதிய
தொடக்கவுரை..!
“முள்ளிவாய்க்கால் முடிவல்ல
தொடக்கம்”
சிங்களத்தின்
வைகாசி வதை கண்டு
கவிஞன் ஒருவன்
செப்பிவிட்ட
செம்மொழி
சாத்தியமானது
சத்தியமானது இன்று..!
விடுதலைக்கு
விதையாக்கி
புதைத்துவிட்டோம்
பல்லாயிரம் உயிர்களை..!!
கற்புக்காய் ஊரையே எரித்திட்ட
கண்ணகி வரிசையில் அன்றி
இனத்திற்காய்
தன்னையே எரித்திட்ட
தீரரின் நினைவொடு..
தீயுக்கும் ஆங்கே
உடல் தனைக் கருக்கி
உயிர் தருதல் விட்டு
உறவுகளே
ஒற்றுமையால்
உரைத்து நிற்போம்
உலகம் ஏற்க..
தமிழரின் தாகம்
தமிழீழத் தாயகம் என்றே..!
படங்கள்: முகநூல்