நெல்லியடியில்
நெத்தியடியாய்
நெடுநாள் சிங்களப் பகை
நொருக்கி
வீழ்ந்த அந்த
நெடும் வீரன்
மில்லர் வழியில்…
தமிழராம் எம்
தாகமாம் தமிழீழம்
விடியும் வரை
பிச்சை கேட்டு
அடிமைகளாய் வாழப் போவதில்லை…!
விடியலின் கனவோடு
கந்தக மூச்செடுத்து
சாவினில் வாழும்
மறப் புலிகளாய்
கரும்புலிகளாய்
எம் தேச விடியலை
சிதைக்க நினைக்கும்
தடைகள் முடிப்போம்.
விடியற் சூரியனை
கூவி அழைத்து
ஈழ வானில் சேர்த்து..
மின்னிடும்
வான் தாரகைகளாய்
நாமும்
மிளிர்வோம்.
தலைவன் வழியில்..
விடியலின் வேளை வரை
தமிழர் நாம்
என்றும்
கரும்புலிகளே…!
(05.07.2009 கரும்புலிகள் நாள் – Black Tigers Day)
padithavan said,
ஜூலை 6, 2009 @ 6:07 முப
good
kuruvikal said,
ஜூலை 6, 2009 @ 11:01 முப
நன்றி தோழரே..!
raavan rajhkumar said,
ஓகஸ்ட் 7, 2009 @ 1:03 பிப
unarvugal vaazhga..!nallaayirukku.
kuruvikal said,
ஓகஸ்ட் 7, 2009 @ 1:09 பிப
நன்றி ராவன் ராஜ்குமார்.