மாறாத வடுக்களை
எம்
இதயங்களில் எழுதிவிட்ட
எதிரியே..
இந்தப் பிஞ்சுகள்
செய்த குற்றம் என்ன..??!
ஏன் இந்தத் தண்டனை…??!
உலகம் இயக்கும்
இயந்திரப் பறவைகள் கொண்ட
உன் பலத்தால்..
அதன் திமிரால்
மக்களை…
தண்டிக்க அவசரப்பட்ட
நீ…
இழந்து போன
இந்த மொட்டுக்களின் வாழ்வை
மீளளிக்க முடியுமா..??!
போர் செய்து
என்ன வென்றாய்..?!
தமிழர் நிலங்களைப்
பறித்தாய்.
மனித மனங்களை சரித்தாய்..
மனிதம் அழித்தாய்..!
ஏன்…
நீ.. மனிதன் அல்ல
சிங்களப்
பேரினப் பிசாசு என்று மொழிந்தாய்.
மனிதனாய்
உன்னோடு வார்த்தைகளால்
பேசிப் பயனில்லை..
இந்த மொட்டுக்கள்
விரிய முதல் விட்ட
உயிர் மூச்சு
உன்னை அழிக்கும்..!
அப்போதே
அவர்கள்
ஆன்மா சாந்தியடையும்..!
சிங்கள விமானப்படை நடத்திய செஞ்சோலைப்படுகொலைகள் பற்றிய மேலதிக விபரங்கள் இங்கு.