Archive for ஜூலை 5, 2009

நாங்கள் கரும்புலிகள்.

blacktigers

நெல்லியடியில்

நெத்தியடியாய்

நெடுநாள் சிங்களப் பகை

நொருக்கி

வீழ்ந்த அந்த

நெடும் வீரன்

மில்லர் வழியில்…

தமிழராம் எம்

தாகமாம் தமிழீழம்

விடியும் வரை

பிச்சை கேட்டு

அடிமைகளாய் வாழப் போவதில்லை…!


விடியலின் கனவோடு

கந்தக மூச்செடுத்து

சாவினில் வாழும்

மறப் புலிகளாய்

கரும்புலிகளாய்

எம் தேச விடியலை

சிதைக்க நினைக்கும்

தடைகள் முடிப்போம்.


விடியற்  சூரியனை

கூவி அழைத்து

ஈழ வானில் சேர்த்து..

மின்னிடும்

வான் தாரகைகளாய்

நாமும்

மிளிர்வோம்.

தலைவன் வழியில்..

விடியலின் வேளை வரை

தமிழர் நாம்

என்றும்

கரும்புலிகளே…!
(05.07.2009 கரும்புலிகள் நாள் – Black Tigers Day)

Comments (4) »