உச்சியில்
வட்டம் ஒன்று வரைந்து
நடிவில்..
வடிவாய் ஓர் கோடிழுந்தேன்.
பின்.. ஆங்கே
கோளங்கள் இரண்டு
சரியாய் பொருத்தினேன்.
கோடும் வளைய
வளையிகள் கொண்டு சரி செய்தேன்.
ஈர்ப்பு மையம் மாறிப் போக
பிறை ஒன்று
உச்சத்தில் வைத்தேன்
சமநிலை குழம்ப
முக்கோணம் ஒன்று
கூடச் சேர்த்தேன்..!
கோடுகள் சேர்ந்து
ஓவியமாக..
உயிரற்று நின்றது.
கணிதத்தில்
வகையீடு தொகையீடு
சமன்பாடுகள் பல போட்டு
திரிகோண கணிதமும்
கேத்திர கணிதமும்
எல்லாம் கலந்து
அட்சர கணிதத்தில்
ஒருபடி.. இருபடி
எல்லாம் தாண்டியும்..
பயனில்லை..!
அலுப்புத்தட்ட
கட்டிலில் சாய்ந்தேன்
நித்திரை வெளியில்
கோடுகளின் எண்ணத்தில்
உயிர் பெற்றது
ஓவியம்.
வார்த்தைகள் தேடினேன்
முந்திக் கொண்டு..
ஓவியம் பேசியது
“உன்னவள் நானடா”
என்றது தான்..
துள்ளினேன் குதித்தேன்
கட்டிலும் முறிய
கழன்றது வீழ்ந்தேன்
கனவும் கலைந்தது..!
அயலில் தேடினேன்
அற்புதமாய் நினைத்தது
என் வாழ்வில்
கசங்கிக் கிடந்தது.
கண்ணீரில் குளிப்பாட்டி
என்னைக் கரைய விட்டது
ஓவியம் அல்ல
என்னவள் நினைவு..!