ஈழப் பண்ணையில்
கந்தன் என்ற கமக்காரன்
கட்டி வளர்த்த
காளை மாடுகள்..
பண்பட்டு
மண் பண்படுத்தி
மக்களுக்காய் உழைத்தன
ஓர் காலம்.
இன்றோ..
கட்டறுத்து
சொந்த நிலங்கள் மேயும்
கட்டாக்காலிகளாய்..!
வளர்த்தவரையே
மூர்க்கம் கொண்டு
முட்டி மோதி
சாகடிக்கும்
நிலையும் காணீர்.
விசமிகளும்
கரடிகளும்
விசயத்தோடு
பழி தீர்க்கும் படலம் தொடர்பில்..
எதிரிகளின் கைப்பாவைகளாய்
மூர்க்கம் கூட்ட
கட்டாக்காலிகளிடம்
சாராய வெறியூட்டும்
நிலையும் காணீர்..!
எச்சரிக்கை..!
எப்பொருள்
யார் யார் வாய்
கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள்
காண்பது அறிவு.
பின்னூட்டமொன்றை இடுக