கள்ளாடும்…பங்கிறச்சியும்.

stolen_goat_pink_nails_1349832062016_284

கடப்பு வைச்சு

காத்திருந்த வேளை – மர்மமாய்

கழுத்திறுகி இறந்தது ஓர் ஆடு.

கள்வரும் அது கண்டு..

கட்டியே இழுத்துச் சென்றார்.

கண்ணியமாய் நீதி உண்மை விளம்ப முன்..!

 

கள்ளுக் கடையருகில்

கள்ளக் கடை விரிச்சு

கள்ளாடும் ஆனது பங்கிறைச்சி.

கள்ளின் வெறியதில்

கழிவு விலை கேட்ட இடத்தில்

கன்னம் பறக்க

கதறி அழ

கட்டிப்புரண்டு..

கண்டபடி நடந்தது அடிபாடு.

 

களத்திலும் அது

கதை.. கட்டுரை என்றாக

கடைசியில்

கன்னம் பழுத்த கூட்டம்

கழுதைக் கத்தல் கத்துது

கதைகள் பல விடுகுது…

கள்ளாட்டுக்கும்… யாரும் உரிமை கோரவில்லை..

கறுத்தாடு அதுவும் கோரை தின்றே.. “கேர்ணல்” ஆனது என்று.

களவெடுத்தது நாமும் அல்ல

கள்வரும் அல்ல – நாம்

கண்ணியமானவரே என்று.

 

கடைக்கண் விழி திறந்து

கவனமாய் சிரிக்குது நீதி…

கள்வர்கள் கூட்டத்தின் களிப்பதில்

கணவான் புத்தனும் மயங்கினனே என்று.

 

கண்டபடி உளறிவிட்டால்…

காணக் கேட்க யாரும் இல்லை என்றால்

கனவும் நிஜமாயே நிற்கும்

கழுதை கூட ஏரேபிளேன் ஓட்டும்..!!!

கல்வி கற்றும்

கல்லாமை மேவி நிற்கும்

கண்றாவிக்

கல் தோன்றாக் காலத் தமிழரிடம்..!

 

கற்காலம் தவறாமல் தற்காலமும் நிற்கும் தமிழரின்…

கனவுத் திரை விலக்க

கதிரவனாய் ஒருவன் வர வேண்டும்..

கள்வர் கூட்டம் கலைந்தோடும்

களிப்பான நேரம் அதுவாக வேண்டும்…!

கணமேதும் தவறாமல் அது நடக்க

கடவுளிடம் வேண்டுதலே

கடன் என்றாகி நிற்கிறது இன்று..

கள்வர்கள் காலம் இதுவென்பதால்..!

Leave a comment »

பார்ட்டிக்கே பார்ட்டி கொடுப்பமில்ல..!

47769_345780482196250_419444638_n.jpg

ஆண்டில நாளு 365

அதில நாங்க வைக்கிற பார்ட்டி 265

அதில  “பாட்டிகளுக்கு”.. “பார்டிகளுக்கு”  வைக்கிற பார்ட்டி 165

அதில பேர்த்டே பார்ட்டி 125

அதில வெல்கம் பார்ட்டி 85

அதில உடான்சு பார்ட்டி 65

அதில வெடிங் பார்ட்டி 55

அதில சாமத்தியவீட்டுப் பார்ட்டி 35

அதில எக்ஸாம் பார்ட்டி 25

அதில ரிஸல்ட் டே பார்ட்டி 15

அப்புறம்.. கிரயுவேஷன் பார்ட்டி ஒரு மூணு..

அவவுக்கு மூட் அவுட்டானா

அதுக்கும் ஒரு பார்ட்டி..

அட அழுகிற குழந்தையை

அரவணைக்க அதுக்கும் ஒரு நாலு பார்ட்டி – அப்படியே

ஆண்டு முழுக்க பார்ட்டி

அதில கோலில வைக்கிற பார்ட்டி முக்கால்வாசி

அருகில கோயில்ல வைக்கிற பார்ட்டி அரைவாசி

அப்புறம் வீட்டில வைக்கிற பார்ட்டி கால்வாசி..

அங்கின ரெஸ்ரோரண்டு வழிய வைக்கிற பார்ட்டி அரைக்கால்வாசி

அதனால…

அண்ணருக்கும் ஆகுது சொட்ட

அண்ணிக்கும் ஆகுது கொழுப்பு

அதோட

அனைத்துப் பொக்கற்றுகளும் காலி – இருந்தும்

அழுகையை அடக்கிக்கிட்டு..

அமர்ந்திருந்து புளூருத்தோட

அளக்கிறார் பாருங்க…

அண்டப்புளுகு…!

அடுத்த பார்ட்டிக்கு  “பார்டிகளை”  தயார் பண்ண..!

அட இதுவே ..

அந்நிய நாட்டில் நம்ம புலம்பெயர் தமிழங்க

அற்புத வாழ்வும் ஆச்சு..!

படம்: முகநூல்.

Leave a comment »

என்னைக் கடந்து போறவளே..

விடியலோட வந்தவள்

வியக்கும் பல

வினாக்கள்…

விடைகள் தந்தவள்

விடைபெறும் தருணமிது..!

 

விடலை இவன்

விடயத்திலும்

விதைத்து விட்ட தடயங்கள் பல.

விரியும் அந்த வாழ்வெனும் வான்வெளியில்

விரித்து விட்டால் வயதொன்றை கூட்டியே அதிகம்..!

 

விந்தை இவள் வரவோடு

வியந்து பல

விடயங்கள் நடக்கும் என்றார்

விபரம் இன்றியோர் – அவளோ

விளையாடிச் செல்கிறாள்

விலை கூட்டிய பொருண்மிய

விடயங்கள் தந்துமே..!

 

விடியலுக்காய்

விழித்திருக்கும் தாய் மண்ணில்..

விழுமியங்கள் தொலைந்து

விழும் பிணங்களே

விடையாய் இம்முறையும்.!

விடுதலைக்கும்

விரியுது தூரம் இன்னும் நீண்டே..!

 

விண்வெளியில்

வியத்தகு மாற்றம்

விரித்த மாயனின் கூற்றை

விழுங்கி விட்டுச் செல்பவளே – நீ

விட்டுச் செல்லும் தங்கையவள் பின் வருகிறாள் – அவள்

விசயம் சொல்கிறேன் அப்புறம் – இப்புறம்

விடையனுப்புகிறேன் உன்னை

விடைபெறு மகிழ்வுடனே..!

Goodbye 2012

582363_10151179675037944_1253815789_n.jp

Leave a comment »

எனியும் மெளனம் தேவையா..?!

indian-military-in-action.jpg?w=300&h=27

 இந்தியப் படைகளின் பெண்களுக்கு எதிரான வன்முறைக் காட்சி. இதே போன்ற காட்சிகள்  ஈழத்தில் வன்னியில்.. சிங்களப் படைகளினால். அவர்களின் வழிகாட்டிகள் யார் என்பதற்கு இந்தப் படம் சாட்சி…

[ http://southasiaspea…ial-powers-act/ ]

வானலையில்

குயிலாய் ஒலித்தவள்

இதய நோயாளி..

வன்னி ஆக்கிரமிப்பில்

பல்லாயிரம் தோழிகளோடு

பிணமாய்..!

தமிழ் பெண்களை

புணர்ந்திழுத்தே கொன்ற

சிங்கள இன வெறிநாய்களின்

தமிழ் ஒட்டுக்குழு

ஓநாய்களின்

கொடூரத்தின்  முன்னே..

மக்களின்

கண்ணீர் காய்வதற்கிடையில்..

 

நாலே வயது

நடக்கக் கூட தெரியாத பிஞ்சு – அதை

காம வெறியில்

பிரிச்சு மேஞ்சு

மோச்சரியில் போடுகிற

ஆக்கிரமிப்பு உலகம்

ஈழத்தில்…!

 

பள்ளிப் பிள்ளை

பாடம் கற்கப் போகும் வேளை..

காவல்துறையின் கவனிப்போடு

கட்டறுத்து அலையும்

குடிகாரக் கூட்டத்தின்

போதையின்

கரங்களில் சிக்கிச்

சீரழிவு…

இப்படி ஓர் உலகம்

தமிழகத்தில்..!

 

புது… டெல்லியில்

பஸ்ஸில் போகும்

பயணத்தில் கூட

கொடுத்த பணத்திற்கு

பாதுகாப்பு இல்லை..!

சட்டத்தின் அமுலாக்கமும்

அங்கு இல்லை..!

சண்டியர்களின்

சளைக்காத உணர்விற்கு

அவள்  உடல்.. பொருள்.. ஆவி

பரிசளிப்பு..!

 

எல்லாம் முடிய

உயர் பீடங்களில்

மக்களின் வாக்குகளில்

குந்தியுள்ள

மந்திகளோ

வெண்ணிறை ஆடை போர்த்திய

மிருகங்களாக..

எக்காள ஒலி எழுப்பி

ஆரவாரிக்கின்றன.

இவை தொடர்வதா

நிற்பதா..???!

விவாத  மேடைகள்

அரங்கேறுகின்றன..!

 

ஆனால்..

அடுத்த கணமோ

இன்னோர் பெண்

பிணமாகத் தயாராகிறாள்..!

 

நீதி தேவதை

நிலைதடுமாறிவிட்ட

தேசங்களில்…

மீண்டும்

செப்புத் துண்டுகள்

துப்பும் கருவிகள்

நிமிர்ந்தால் அன்றி..

இந்த மனித மிருகங்கள்

கொண்ட எண்ணங்கள்

மடிவது  நடவாது..!

மண்ணில்

மானுடமும்

வாழாது..!

Leave a comment »