கன்னத்தில் முத்தமிட்டு
ஈழ அவலத்தை குறைத்திரையில் இட்டு
‘மணி’ பார்த்த மணியருக்கு
கல்கிக் கடலில்
மூழ்கி முத்தெடுக்க
ஈழத்திட்டின்
வன்னிக் கோடியின் அனுராதபுரம்
கரைதட்டி இருக்கு.
—-
அண்மைக் காலத்தே
புலிக் கொடி ஒன்று
உயிராயுதமாய்
அனுராதபுரம் புகுந்து
நிஜக் கதை படைத்த போது
தூசி மண்டிக்கிடந்த
தமிழகத் திரைக் கண்கள்..
கல்கிக் கிழவனின்
கற்பனையில் வந்த
பொன்னியின் செல்வனால்
வன்னிச் செல்வன் முன்
திறந்து கிடக்குது..!!
—-
மகிந்தனை வீழ்த்திய
மகிமையை பேசுது
சோழ வாரிசுகள்…
அனுராதபுரமோ
தமிழனை வீழ்த்திய
மகிந்தவின் கதை பேசி
சிங்கள வீரம் காட்டுது.
முரண்பாட்டுக்காய் அல்ல
தமிழினம் முரண்படா ஒற்றுமை ஒன்றுக்காய்
கடந்த காலம் மீளுமா…
ஈழமண்ணில்
தமிழ் ராச்சியம் அமையுமா..?
ஏக்கமே
பொன்னியின் செல்வனில்
நிறைஞ்சு கிடக்குது..!!
—-
மணிகளும் ராஜாக்களும் திரைகளும்
ஈழக் களத்தின்
உண்மைக் கதை பேசுமா..?
ஈழக்கிழக்கு தான் விடியுமா..?
சோழப் பரம்பரை மீளுமா..
புலிக்கொடி தான் மீண்டும் வானேகுமா..??!
மீண்டும் ஏக்கமே
தழுவி தொக்கி நிற்குது
பொன்னியின் செல்வனைக் காண்கையில்..!!
பின்னூட்டமொன்றை இடுக