ஆகாசவாணி…
டெல்லியின் குரலாய்
தமிழ் ஈழ மண்ணில்
ஒளிவு மறைவு வாழ்வில்
சந்துபொந்தில்
நடந்த அந்த
ஓரிரு நிகழ்வுகள் கூட
ஒளிப்பு மறைப்பின்றிச்
சொன்னது ஓர் காலம்..!
காலை மதியம் மாலை என்று
முறுக்கிவிட்ட
வானொலிகள்
மத்திய மாநிலச் செய்திகள் காவி வர
களத்தில் நின்ற வீரனும்
நிகழ்வின் விளைவறிவது
அங்கு தான்..!
அமைதிப் படை என்று
அரக்கர் படை ஒன்று வந்து சேர
ஆகாசவாணியும்
அண்டப்புளுகிற்கு
அடிபணிந்து கொண்டது.
லங்காபுவத்தோடு
காதலொடு கூடலும் கண்டு கொண்டது..!
அன்று தொற்றிய வியாதி
இன்றும் ஆறவில்லை.
இத்தனை ஆயிரம்..
தமிழர் சாவுகள் கண்டும்
இரங்கவில்லை…
அண்டப்புளுகொடுதான்
அதன்
அந்தியக்காலம் என்று
அடம்பிடிக்குது..!
இந்தியாவின்
இந்துக்கள் கட்சியாம்
ஈழ மண்ணில்..
தமிழ் பேசும்
இந்துக்கள் அழிவை
சிங்களம் செய்தால்
மன்னிக்குமாம்.. மறக்குமாம்..!
ஹிந்தி பேசும்
இஸ்லாம் செய்தால்
கொலைக் கருவி ஏந்துமாம்…!
சரத்பவாராம்
அன்னை இந்திராவோடு
ஒட்டிய போது
ஈழத்தமிழருக்காய்
ஓர் விரதம்
அன்னை சோனியாவோடு
ஒட்டிய பிறகு
விரதமும் தாபமாச்சு..!
ஆகாசவாணிகளே
ஆகாயம் விட்டு வர வேண்டாம்
இடையில்
இனிப்பாய் அமைந்திட்ட
சிங்கள உறவுகள்
அறுக்க வேண்டாம்.
அண்டை அயலில்
நடந்த இன அழிப்புக்கு
ஓர் ஒப்பாரி…
மனிதாபிமானம்
இருந்தால்
காட்டுங்கள்..!
கலைஞரும்
கழன்றுவிட்ட பிறகு
கட்சிகள் சாட்டி
கழுத்தறுப்பது
தொடர வேண்டுமா..??!
ஆகாசவாணிக்கு
ஈழத்தமிழன்
தந்த ஆதரவுக்கு
நன்றிக்கடன் வேண்டாமோ..??!
கொடுஞ் சிங்களத்திற்கு
கொடுத்தது போக..
நன்றி
மிச்ச சொச்சம்
எஞ்சி இருந்தால்……
பாரதத்தில் கீதை சொன்னபடி..
ஐநாவில் அதை
அழிந்து போன
தமிழருக்கு.. காட்டி நிற்க..!!!
திண்டுக்கல் தனபாலன் said,
மார்ச் 21, 2013 @ 4:21 முப
வரிகள் சாட்டையடி…!