தேடி வரும்
சிங்கள ஆமியை
துரத்த வா என்றால்..
விழுந்தடிச்சு
விமானம் ஏறி…
இப்ப
குடும்பம் குடும்பமாய்
பெருகி..
சவரி முடியொடு
சர்வ மேக்கப்பும் வாங்கித் தந்து
தங்கள் பிள்ளைகள்
அழகோ அழகென்று
அண்டப்புளுகு புளுகி
அவற்கெல்லாம்
அத்தனை வசதிகளும்..
ஆடல் பாடலோடு
ஆயிரம் ஆயிரமாய்
வீண் செலவிட்டு
செய்து வைக்கினம் கல்யாணம்…
அமைச்சுக் கொடுக்கினமாம் வாழ்வு
வெள்ளைக்காரனும் காரியும்
கூட மருமக்களாம்.
என் பிள்ளை
வாழ்ந்து தானே ஆகனும்
அவனுக்கு அவளுக்கு
வெக்கை தாங்காது
ஊருக்கு போனால்
பூச்சிக்குப் பயம்
வெயிலுக்கு வெளுத்திடுவம்
ச்சா..
கறுத்திடுவம் என்று
வகை வகையாய் திரவியங்கள்
வாங்கி தடவினம்.
வெள்ளைக்கு நிகராய்
வாழனும் நாங்களும்..
வாஸ்தவம் பேசும் கூட்டம்.
வந்தாள்.. அந்த மகள்
கார்த்திகை திங்கள் 27ம் நாள்
எவர் பெத்த மகளோ
எது உயிர்த்த பெண்ணே
ஆனாலும் உரித்துப் போட்டாள்
ஆயிரமாயிரமாய்
ஓநாய்கள் தோல்…!
மேக் கப் மாமி
பவுடர் மாமி
கூவுவோர் கையில்
கறுப்பு வெள்ளி
மலிவு விலை கூடையில் மேக் கப்
குவியல் குவியலாய்..!
துவாரகா வா…
துருவி ஆராயினமாம்
இல்லையடா
அவள்
இறுதிப் போர் வரை
கொண்ட இனத்துக்காய்
கொண்டை கூட
கட்ட காலமின்றி
களம் கண்ட
அஞ்சா புலி மகள்..!
நிழல்
வெளுத்தது
உங்கள் சாயம்..!
போலியா அவள்
போலிகளே..
போட்ட வேடங்கள் களைந்தது
போங்கடா போங்க..!!