விழியோரங்கள் அரும்பிய
நீர் துடைத்து
கயிற்று நிரைகளுக்குள்
அடங்கி இருக்கும்
மக்கள் கூட்டம் நடுவிருந்து
கண்கள் அவனையே நோக்குகின்றன..!
பின்புலத்தில்
சீறிப் பாயும் புலியா
யாழ் இந்துவின்
உண்மைப் புதல்வனா
தாய் தமிழீழத்தின்
செல்லப் பிள்ளையா
மக்கள் விடுதலையின்
ஒற்றைக் குரலா…
கேள்விகள்
அவன் கோலம் கண்டெழுகின்றன..!
சின்னஞ்சிறுசுகளின் மாமா..
எங்கள் அண்ணா
உங்கள் தம்பி
பலரின் பிள்ளை
சிலரின் எதிரி
சிந்தனை ஒன்றை வைத்து
உண்ணா நோன்பிருந்து
மக்களை துயில்
எழுப்பிக் கொண்டிருந்தான்..!!
கனவுகள் அவன்
தனக்காக கண்டதில்லை..!
சனத்துக்காக தன் சாவிலும் கூட
மேலிருந்து
விடுதலையை காண்பேன் என்றே மொழிந்தவன்…
தேகத்தையே
தேசத்தில் பிள்ளைகள் படிக்க
கொடுத்தவன்..
நம்பிக்கை வைத்து உறங்கிக் கொண்டிருந்தான்.
இன்று…
வீழ்ந்துவிட்ட அவன் அடையாளங்கள்
வீழாது வைத்திருக்கிறது
இதயங்கள் எங்கும் அவன் நினைவுகள்.!!
உயிர் உள்ள வரை
தமிழன் என்ற இனம் உள்ளவரை
அண்ணன் திலீபன் வாழ்வான்
அது உறுதி..!
ஆனால்…
அவன் உயிர் தந்த இலட்சியம்..
செத்து விடுமோ..
சாகடிக்கப்படுமோ…??!
வினாக்கள் விளைகின்ற காலமிதுவாகிப் போனது
துரதிஸ்டம்..!!
இந்த நிலை மாற வேண்டும்
சுதந்திர தமிழீழம் மலர வேண்டும்
அதுக்கு வெடிக்க வேண்டும்
மக்கள் புரட்சி..
மிரட்சி அல்ல…!!!!
பின்னூட்டமொன்றை இடுக