எங்கள் அண்ணாக்கள் அக்காக்கள் எங்கே…???!

crying_eye1

உறுமும் அந்தப் புலிக்கொடி தாங்கி
வந்த எங்கள் அண்ணாக்கள் எங்கே.. அக்காக்கள் எங்கே..??!

களப்பலியாய் போனவர் போகட்டும்
அவர்களெம் மாவீரச் செல்வங்களாய்
எம்மோடு வாழ்வது உறுதி..!
ஆனால்..
சுதந்திர தேச வேட்கை கொண்டு வேங்கைகளாய்
உலா வந்த இந்த மானத் தமிழர்கள் தான் எங்கே..???!

கவிபாடும் தமிழ் சொல்லாலே
புலியெனப் பாய்ந்த
புதுக்கவிஞன் புதுவை அண்ணன் எங்கே..??!

“ஆழ்ந்து யோசி ஆராய்ந்து பேசு” என்ற சொல்லை வகுத்து
ஈரோஸின் பிறப்போடு உறவெடுத்து
புலிப் பாசறை புகுந்த அந்த அரசியல் வித்தகன்
பாலகுமாரன் அண்ணன் எங்கே..??!

திருநெல்வேலி முதற் தாக்குதலின் களப்பலி
அவன் பொன்னமான் தம்பி
தமிழீழ அரசியல் தத்துவஞானி
எங்கள் யாழ் இந்துவின் மைந்தன் யோகி அண்ணன் எங்கே..??!

இளம்பிறையாய் யாழ் வீதி எங்கும் ஓடோடி
அரசியல் கருத்துரைத்து
இளைய நெஞ்சங்களில் இடம்பிடித்த
அந்த இளம்பரிதி அண்ணன் எங்கே..??!

தெந்தமிழீழம் தந்த களத்தளபதி
இராணுவப் பேச்சாளன்
உலக ஊடகங்களின் கவனக் கவர்வான்
இளந்திரையன் அண்ணன் அவன் எங்கே..??!

தமிழீழத் தலைநகராம்
திருமலையின் நிர்வாகி
எழில் மிகு நகரின் தளபதி
எழிலன் அண்ணன் எங்கே…??!

இப்படி எத்தனையோ அண்ணாக்கள்
நேற்று வரை எம்மோடு உறவாடிய
எங்கள் பாச உறவுகள் எங்கே..??!
இனிய தமிழ் பேசி எம் இதயங்களில் வாழ்ந்த
தமிழினிய அக்காக்கள் எங்கே..??!

சிங்களச் சிறை சென்றாரோ
புத்த மைந்தன் மகிந்தவின்
சித்திரவதைக்கு இரையாகிப் போனாரோ..??!

சொந்தங்களை
விலைமதிப்பில்லா அந்தச் செல்வங்களை
தொலைத்துவிட்டுத் தேடுகிறேன்
எங்கள் உறவுகள் எங்கே..??!

கண்டவர் சொல்வரோ
காட்டிக் கொடுத்தோர் இரங்குவரோ..??!
இன்றேல்
மண் வாரி வசை பாடுவரோ
கல் வாரி என் தலை மீது விட்டு  எறிவரோ…??!
எனக்குக் கவலை இல்லை..!
என் அண்ணன்கள் அக்காக்கள் எங்கே..??!

காலமே பதில் சொல்
நான் அவர்களை உயிரோடு
காண வேண்டும்
என் சுதந்திர தேசத்தின்
தேச பிதாக்களை
தரிசிக்க வேண்டும்..!

அவர்கள் மூச்சாய் வாழும்
தமிழீழக் காற்றே
தேடி வந்து ஒரு சேதி சொல்
என் சொந்தங்களைக்
கண்டதாய்.. உயிரற்ற உடலாய் அன்றி
உயிரோடு கண்டதாய் சொல்..!
காத்திருக்கிறேன்..
விழி எங்கும் நீர் நிறைய…!!!

மறுமொழிகள் (2) »

போர்த்திட்டாண்டா தமிழன் பொன்னாடை போர்த்திட்டாண்டா..!

பொன்னாடை

பொன்னாடை

போர்த்திட்டாண்டா..
தமிழன் பொன்னாடை போர்த்திட்டாண்டா..!

காலம் காலமாய்
வரலாறாய் எழுதி வைத்து..
தமிழினத்தை..
அழித்து துன்புறுத்தியவனுக்கே
சொந்த இனத்தை..
ஊரை விட்டே துரத்தி
அடித்தவனுக்கே..

தமிழன்
பொன்னாடை போர்த்திட்டாண்டா..
பாரடா பார்.. உலக மைந்தா.

தமிழன் போல்
சன நாய் அக வாதி உலகில் உண்டோ சொல்
அவன் போல்
வீரம் உனக்கும் வருமா கேள்..??!

மானம் கெட்டதுகள்
வாழ்ந்தென்ன
வீழ்ந்தே தொலையட்டும் என்றே
அன்னை சோனியாவின்
எடுபிடிகளாய்
வடக்கிருந்து வந்து..

தமிழன்
பொன்னாடை போர்த்திட்டாண்டா
சிங்களத் தானைத் தளபதிக்கு
பொன்னாடை போர்த்திட்டாண்டா..!

வாழ்க தமிழ் வீரம்
எழுக தமிழக புதிய வரலாறு..
காட்டிக் கொடுப்பதில்
காக்கவன்னியனுக்கு எட்டப்பனே
வழிகாட்டி என்று
புதிய பரணி பாடு..
தமிழா பாடு.

தமிழ் மொழி
கனிமொழி
சிங்களவன் பாதம் தடவினாள் என்று
அவள் வீரம் சொல்லி
உன் பரணியில்
புறணி பாடடா தமிழா
பாடு..!

மறுமொழி அளிக்கவும் »

கிளியைப் பிடிச்சு கூண்டிலடைச்சு பேசச் சொல்லுற உலகம்.. அது பேசினால் கேட்குமா..??!

கூண்டிலடைச்ச கிளி பேசினால்..!

கூண்டிலடைச்ச கிளி பேசினால்..!

கிளியைப் பிடிச்சு கூண்டிலடைச்சு பேசச் சொல்லுற உலகம்.. அது பேசினால் கேட்குமா..??!

படப்பிடிப்பு: குருவிகள்.

மறுமொழி அளிக்கவும் »

செஞ்சோலையில் கருகிய மொட்டுக்கள்..!

dead-rose

மாறாத வடுக்களை

எம்

இதயங்களில் எழுதிவிட்ட

எதிரியே..

இந்தப் பிஞ்சுகள்

செய்த குற்றம் என்ன..??!

ஏன் இந்தத் தண்டனை…??!

உலகம் இயக்கும்

இயந்திரப் பறவைகள் கொண்ட

உன் பலத்தால்..

அதன் திமிரால்

மக்களை…

தண்டிக்க அவசரப்பட்ட

நீ…

இழந்து போன

இந்த  மொட்டுக்களின் வாழ்வை

மீளளிக்க முடியுமா..??!

போர் செய்து

என்ன வென்றாய்..?!

தமிழர் நிலங்களைப்

பறித்தாய்.

மனித மனங்களை சரித்தாய்..

மனிதம் அழித்தாய்..!

ஏன்…

நீ.. மனிதன் அல்ல

சிங்களப்

பேரினப் பிசாசு என்று மொழிந்தாய்.

மனிதனாய்

உன்னோடு வார்த்தைகளால்

பேசிப் பயனில்லை..

இந்த  மொட்டுக்கள்

விரிய முதல் விட்ட

உயிர் மூச்சு

உன்னை அழிக்கும்..!

அப்போதே

அவர்கள்

ஆன்மா சாந்தியடையும்..!
சிங்கள விமானப்படை நடத்திய செஞ்சோலைப்படுகொலைகள் பற்றிய மேலதிக விபரங்கள் இங்கு.

மறுமொழி அளிக்கவும் »

அசலும் நகலும்..!

அசல்

அசல்

நகல்

நகல்

படப்பிடிப்பு: குருவிகளின் நட்பு வட்டாரம்.

மறுமொழிகள் (2) »

தும்பினியின் இடுப்பினில் தெரியுது தமிழீழம்.

சிங்களத்தி தும்பினி

சிங்களத்தி தும்பினி

சும்மா கிடந்த நாம்..
தமிழீழ விடுதலை என்றோம்..
ஆயுதம் எடுத்து
ஆலயத்தில் கொள்ளையடித்தோம்..!
தமிழ் மக்களின் தலையினில்
நன்றே..
மிளகாய் அரைக்க கற்றுக் கொண்டோம்..!
ஆட்காட்டி
வயிறு வளர்த்தோம்..!

போகும் வழி
இடையில் மறந்தோம்..
சிங்களச் சீமையில்
சீமைப் பசுக்களிடையில்
சரணடைந்தோம்..!

தாடி வளர்த்து
கம்னீசியம் காட்டினோம்
வெள்ளை ஜிப்பாவில்
ஜனநாயகம் பேசினோம்
புலி எதிர்ப்பும்
தமிழீழ அழிப்புமே
எங்கள் அரசியலாக்கினோம்.

இன்று…
ஆக்கிரமிப்பு படைகளோடு
தும்பினியின் இடுப்பாட்டத்தில்
சதியோடு குதி போடுறோம்..
தெரியுது தமிழீழம்..
சிங்களச் சீமைப்பசுவின்
சிற்றிடையில் என்று
வாக்குக் கேட்கிறோம்.

மத்தியில் கூட்டாட்சி
மாநிலத்தில் சுயாட்சி
எல்லாம் மாய மான் விளையாட்டு..
பிரபாகரன் எனும்
பெரும் வீரன் இருந்த
பயத்தில்..
உளறித் தள்ளினோம்..!

உறுதியாய் சொல்கிறோம்..
அன்றும் இன்றும் என்றும்
எங்கள் வாழ்விடம்..
சிங்களப் பாசறை..!
அங்கே நாங்கள்
சுதந்திரப் பறவைகள்..!

முழங்குகின்றோம்..
சிங்களத்தி
தும்பினியின்
இடுப்பினில் தெரிவது
தமிழீழம் என்றே..!

வாருங்கள் தமிழ் மக்களே
புலம்பெயர்ந்த பெரு வீரர்களே..
கூடிக் கூத்தடித்து..
உணருங்கள் அவள் இடுப்பை
காணுங்கள் தமிழீழ சுகமதை..!

கூவி அழைக்கின்றோம்..
சிங்களத்தியோடு கூடி
உருவாக்குங்கள்
சிங்க – தமிழ் பரம்பரை ஒன்றை..!
அப்போதே காணலாம்
சிங்களத்தீவினில்
தமிழருக்கு ஓர்
“நிரந்தர” விடுதலை..!

அதுவரை
எப்போதும்..
புலி எதிர்ப்பே
எங்கள் தாகம்..!

நன்றி: http://www.kundumani.blogspot.com/

மறுமொழிகள் (3) »

உன் இளமையின் ரகசியம் என்ன..?!

இயற்கையின் இளமையின் ரகசியம்..??!

இயற்கையின் இளமையின் ரகசியம்..??!

படப்பிடிப்பு: குருவிகள்

மறுமொழி அளிக்கவும் »

பால் போல் எனக்கு.. ஒரு கேர்ள் பிரண்ட் வேணும்..!

எனக்கொரு கேர்ள் பிரண்ட் வேணும்..!

எனக்கொரு கேர்ள் பிரண்ட் வேணும்..!

பால் போல் -16 இல் இருக்கும் இந்த Man க்கும்  ஒரு கேர்ள் பிரண்ட் வேணுமாம்..!

படப்பிடிப்பு: குருவிகள்.

இவருக்குப் பிடித்த பாடல் இது.. நீங்களும் கேட்டுப் பாருங்களேன்..!

மறுமொழி அளிக்கவும் »

ஊதா ஊதா ஊதாப் பூ.. நான் பார்த்த.. ஊதாப் பூவே..!

அழகுக்கு முன்.. உண்மைக் காதல்.. படும்பாடு..!

அழகுக்கு முன்.. காதல்.. படும்பாடு..!

ம்ம்.. காலம் பொன்னானது.. காரியத்தை.. சட்டுப்புட்டென்று முடிச்சிடுங்க… இல்ல போட்டி அதிகமாயிடும்.. மவுசும் கூடிடும்..!

- படப் பிடிப்பு: குருவிகள்.

காட்சியில் சம்பந்தப்படாத ஊதாப் பூ இங்கு.. இருந்தாலும்..  இதுதான்.. (மேலே படத்தில் உள்ளது) உண்மையாக அந்த கவிஞர் உச்சரித்த ஊதாப் பூவோ..??!

மறுமொழி அளிக்கவும் »

நாற்று நட்டது ஒருத்தன்.. தண்ணி பாய்ச்சினது ஒருத்தன்.. கடைசியில.. கடா வெட்டிறது..??!

 நாற்று நட்டது ஒருத்தன்.. தண்ணி பாய்ச்சினது ஒருத்தன்.. கடைசியில.. கடா வெட்டிறது..??!

நாற்று நட்டது ஒருத்தன்.. தண்ணி பாய்ச்சினது ஒருத்தன்.. கடைசியில.. கடா வெட்டிறது..??!

நிலைமை அப்படியாப் போச்சு உலகத்தில..!

படப்பிடிப்பு: குருவிகள்.

மறுமொழி அளிக்கவும் »