மாதம் தோறும்
கடமை மறவாத சேவகம்
கருப்பையில் இருந்து
கழிவு வர கால்வாய் வழியாகி
கடத்தி வருவதும்
அதன் கடன்..!
சேதி ஒன்று தெரியுமா..
ஆணின் விறைப்பில்
அதற்கும் ஓர் விருப்பம்
இறுக அணைத்து
இன்பமுற்று வீச்சுக் கூட்டிட
ஆட்லறிகள் வீசும்
எறிகணைகள் முட்டையை
தாக்கும்..!
அங்கு இழப்பு என்று ஒன்றுமில்லை
இன்பமே என்கின்றார்
இரு பாலாரும்..!
ஆனால்..
இறுதியில்..
சண்டையோ
நானா நீயா நுழைப்பது..
அதில் ஆணா பெண்ணா
ஆதிக்கம்..!
கேடு கெட்ட ஜென்மங்களே
உங்கள் ஜனனப் பாதையிலா
ஏட்டிக்குப் போட்டி..
யாரங்கு ஆதிக்கம் என்று..!
அதுவென்ன ஈழத்து ஏ9 நெடுஞ்சாலையா
ஜயசுக்குறு நடத்தி
சிங்களம் போல
ஆக்கிரமித்து நிற்க.
போவதும் வருவதும்
போக்குவரத்து
அங்கு சாதாரணம்
கற்பெனும் கதவு திறந்தால்
எவரும் போகலாம் வரலாம்
அது நன்றோ தீதோ
அவரவர் விருப்பு.
ஆனால்
அது ஒரு வாசற்படி
பல நோய்க் கிருமிகளும்
வாழும் இடம்..!
யோனி ஒன்றும்
மொழிதலற்ற பதமும் அல்ல
முதன்மையற்ற உறுப்பும் அல்ல..
அதற்கும் உண்டு சீரிய கடமை..!
அதன் பெயரால்
இழிவென திட்டுதலும்
கழிவெனத் தூற்றுவதும்
இல்லாது ஒழிக்கும்
வழக்கம் ஒன்று தாரும்.
முட்டாத தொடாத முழுகாத
பதங்களும் கழியும்..!
உடலோடு
ஒட்டிய ஓருறுப்பாய்
பாரும்
அருவருப்பும்
அவதூறூம் நீக்கும்
சுத்தம் அங்கும் அவசியம்
கண்டவரோடும் பாதை பகிர்தல்
அங்கு பாதுகாப்புமில்லை
உணர்தலும் நன்று.
உறுமும் அந்தப் புலிக்கொடி தாங்கி
வந்த எங்கள் அண்ணாக்கள் எங்கே.. அக்காக்கள் எங்கே..??!
களப்பலியாய் போனவர் போகட்டும்
அவர்களெம் மாவீரச் செல்வங்களாய்
எம்மோடு வாழ்வது உறுதி..!
ஆனால்..
சுதந்திர தேச வேட்கை கொண்டு வேங்கைகளாய்
உலா வந்த இந்த மானத் தமிழர்கள் தான் எங்கே..???!
கவிபாடும் தமிழ் சொல்லாலே
புலியெனப் பாய்ந்த
புதுக்கவிஞன் புதுவை அண்ணன் எங்கே..??!
“ஆழ்ந்து யோசி ஆராய்ந்து பேசு” என்ற சொல்லை வகுத்து
ஈரோஸின் பிறப்போடு உறவெடுத்து
புலிப் பாசறை புகுந்த அந்த அரசியல் வித்தகன்
பாலகுமாரன் அண்ணன் எங்கே..??!
திருநெல்வேலி முதற் தாக்குதலின் களப்பலி
அவன் பொன்னமான் தம்பி
தமிழீழ அரசியல் தத்துவஞானி
எங்கள் யாழ் இந்துவின் மைந்தன் யோகி அண்ணன் எங்கே..??!
இளம்பிறையாய் யாழ் வீதி எங்கும் ஓடோடி
அரசியல் கருத்துரைத்து
இளைய நெஞ்சங்களில் இடம்பிடித்த
அந்த இளம்பரிதி அண்ணன் எங்கே..??!
தெந்தமிழீழம் தந்த களத்தளபதி
இராணுவப் பேச்சாளன்
உலக ஊடகங்களின் கவனக் கவர்வான்
இளந்திரையன் அண்ணன் அவன் எங்கே..??!
தமிழீழத் தலைநகராம்
திருமலையின் நிர்வாகி
எழில் மிகு நகரின் தளபதி
எழிலன் அண்ணன் எங்கே…??!
இப்படி எத்தனையோ அண்ணாக்கள்
நேற்று வரை எம்மோடு உறவாடிய
எங்கள் பாச உறவுகள் எங்கே..??!
இனிய தமிழ் பேசி எம் இதயங்களில் வாழ்ந்த
தமிழினிய அக்காக்கள் எங்கே..??!
சிங்களச் சிறை சென்றாரோ
புத்த மைந்தன் மகிந்தவின்
சித்திரவதைக்கு இரையாகிப் போனாரோ..??!
சொந்தங்களை
விலைமதிப்பில்லா அந்தச் செல்வங்களை
தொலைத்துவிட்டுத் தேடுகிறேன்
எங்கள் உறவுகள் எங்கே..??!
கண்டவர் சொல்வரோ
காட்டிக் கொடுத்தோர் இரங்குவரோ..??!
இன்றேல்
மண் வாரி வசை பாடுவரோ
கல் வாரி என் தலை மீது விட்டு எறிவரோ…??!
எனக்குக் கவலை இல்லை..!
என் அண்ணன்கள் அக்காக்கள் எங்கே..??!
காலமே பதில் சொல்
நான் அவர்களை உயிரோடு
காண வேண்டும்
என் சுதந்திர தேசத்தின்
தேச பிதாக்களை
தரிசிக்க வேண்டும்..!
அவர்கள் மூச்சாய் வாழும்
தமிழீழக் காற்றே
தேடி வந்து ஒரு சேதி சொல்
என் சொந்தங்களைக்
கண்டதாய்.. உயிரற்ற உடலாய் அன்றி
உயிரோடு கண்டதாய் சொல்..!
காத்திருக்கிறேன்..
விழி எங்கும் நீர் நிறைய…!!!
சும்மா கிடந்த நாம்..
தமிழீழ விடுதலை என்றோம்..
ஆயுதம் எடுத்து
ஆலயத்தில் கொள்ளையடித்தோம்..!
தமிழ் மக்களின் தலையினில்
நன்றே..
மிளகாய் அரைக்க கற்றுக் கொண்டோம்..!
ஆட்காட்டி
வயிறு வளர்த்தோம்..!
போகும் வழி
இடையில் மறந்தோம்..
சிங்களச் சீமையில்
சீமைப் பசுக்களிடையில்
சரணடைந்தோம்..!
தாடி வளர்த்து
கம்னீசியம் காட்டினோம்
வெள்ளை ஜிப்பாவில்
ஜனநாயகம் பேசினோம்
புலி எதிர்ப்பும்
தமிழீழ அழிப்புமே
எங்கள் அரசியலாக்கினோம்.
வாருங்கள் தமிழ் மக்களே
புலம்பெயர்ந்த பெரு வீரர்களே..
கூடிக் கூத்தடித்து..
உணருங்கள் அவள் இடுப்பை
காணுங்கள் தமிழீழ சுகமதை..!
கூவி அழைக்கின்றோம்..
சிங்களத்தியோடு கூடி
உருவாக்குங்கள்
சிங்க – தமிழ் பரம்பரை ஒன்றை..!
அப்போதே காணலாம்
சிங்களத்தீவினில்
தமிழருக்கு ஓர்
“நிரந்தர” விடுதலை..!